நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Monday, 24 October 2011

கரிய மேகத்தின் உரிய பதில்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எ(ன்ன)ருமை மக்களே....
உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன்...
உள்ளம் அறிந்தேன்...
மழையிடம் மனம் திறந்தேன்...

இதோ இனி மழையின் பதில்...


நான்தான் நீங்கள் நேசிக்கும் மழை...
நான் சொல்லவும் சில உண்டு...
இப்போதுமட்டுமல்ல....எப்போதுமே.....


உங்களுக்கும் எனக்கும் இடையே மண்ணிலுள்ள நீரை எடுத்து என்னிலுள்ள நீரை மரம் என்கிற பாலம் வழியாகவே தந்துவந்தேன்... அவற்றையெல்லாம் அழித்து மரப்பாலங்கள் அமைத்துவிட்டீர்கள்...நீங்களே எண்ணிப்பாருங்கள்...இப்போதெல்லாம் எனக்கு வருவதற்கே வழியில்லை....
முதலில் மரங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்...பிறகு வருகிறேன்....


நாங்கள் மேகத்திலிருந்து விழும்போது...எங்களின் ஒவ்வொரு துளியும் கன்னித்துளிகள்தான்...உங்களின் மாசுக்கள் எங்களை காற்றிலேயே  கற்பழித்துவிடுகின்றன...எங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானபோது நாங்கள் எப்படி வெளியே வரமுடியும்...மாசைக்கட்டுபடுத்துங்கள்...பிறகு
வருகிறேன்....


முன்பெல்லாம்...நான் பூமியின் மீது விழுமுன்னே....கைகோர்த்த காதலர்கள்...என்னில் நனைந்தபடி...ரசித்தபடி....காதலினை வளர்ப்பார்கள்....சிலிர்ப்பார்கள்....இருட்டறையில் கைகோர்க்கும் கள்ளக்காதல் கனிந்து வருவதால்....என் உண்மைக்காதலர்கள் எங்கே போனார்கள்...???மனசைக்கட்டுப்படுத்துங்கள்....பிறகு வருகிறேன்.....


குளம், குட்டை, ஏரி, ஆறு....என நான் பயணிக்கவும், வாசமிகு பூக்களுடன் வாசம் செய்யவும் ஏராளமான இடமிருந்தது....இன்றோ....என்னை அணைக்கின்ற பூமியும் பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்துள்ளதால் என்னால் தங்கவும் முடியவில்லை....தாங்கவும் முடியவில்லை....தயவு செய்து பிளாஸ்டிக் குப்பைகளுக்கு விடை கொடுங்கள்...பிறகு வருகிறேன்....


சுத்தமாக வரும் நான், அசுத்தமான மத்திய மாநில அரசுத்துறைகளின் பள்ளங்களில் விழுந்து...நிறைந்து இன்னும் அசுத்தமான சாக்கடையில் கலந்துவிடுகிறேன்....உங்களுக்கு பணத்தையும், பொருளையும், தங்கத்தையும் சேர்த்துவைப்பதே பெரும் வேலையாக இருக்கிறது...என்னை சேர்க்க மனமில்லாமல் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாய் போகிறேன்...
சேர்த்துவைக்க முயலுங்கள்.... பிறகு வருகிறேன்....


நீங்கள் என்று என்னை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தீர்களோ....அன்றே என்னை விற்று விட்டீர்கள் என்றாகிவிட்டது....இப்போது அழுது புலம்பி என்னபயன்...??? இருந்தும் நான் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறேன்....எனது கோபம் அதிகமாகும்போது வெள்ளமாய் வந்து தாண்டவமாடிவிடுகின்றேன்...இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்.... பிறகு வருகிறேன்.....


நல்ல மழை வேண்டுமென்றால்....
உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்து....
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யுங்கள்....
நீங்கள் கேட்காமல்.... நானே வருவேன்.....

இப்படிக்கு 
மழை.... 

               அன்புடன்..


4 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

படங்கள் ஒன்னோன்னும் பல விசயங்களை சொல்லுது... நல்ல தேர்வு...

சக்தி கல்வி மையம் said...

நல்ல மழை வேண்டுமென்றால்....
உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்து....
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யுங்கள்....// Good.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

சந்திரானந்தா சுவாமிகள் said...

#நல்ல மழை வேண்டுமென்றால்....
உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்து....
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யுங்கள்....
நீங்கள் கேட்காமல்.... நானே வருவேன்....

NICE ONE RAJ.....

SURYAJEEVA said...

சமுதாய கோபம் மிக அதிகமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்