நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Tuesday, 20 September 2011

அணு உலையா??? அணு ஊளையா????

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

திரு ரவி அவர்களால் வெளியிடப்பட்டது....

கூடங்குளம் வரமா, சாபமா என்ற ஒரு கேள்வி என்னை கேட்டால் கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று கேள்விக்கு என்று அறிவூப்பூர்வமாக பதில் கிடைக்குமோ அன்றுதான் இந்த விடயத்திர்க்கும் பதில் கிடைக்கும்.நான் இந்த கட்டுரை எழுத காரணமே இந்த முகநூலில் பல பேர் பலவிதமாக ஸ்டேட்டஸ் போட்டு பதிலை எதிர்பார்த்து அதுக்கு அரசியல் சாயம் பூசி உள்ளது மிகவும் வேதனையே.... நானும் முடிந்த வரை என் அறிவுக்கு எட்டிய வரை தெளிவுபடுத்த முயன்றேன் ஆனாலும் சில பேர் அதை புரிந்து கொள்ளவோ அல்லது அதை பற்றி ஆக்கபூர்வமாக விவாதிக்கவோ தயாரில்லை, மாறாக ஒருவர் கேட்டார் சினிமாவை தொழிலாக கொண்டுள்ள உங்களுக்கு என்ன தெரியும் என்று, அந்த மாதிரி கேள்வி கேட்கும் அன்பு நண்பர்களுக்கு நான் இங்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

நான் ஒரு எலக்ட்ரானிக் பொறியாளர், 2001லேயே சிங்கப்பூரில் உள்ள எகனாமிக் டெவலப்மென்ட் போர்ட் ஆப் சிங்கப்பூர் (EDB) எனும் அரசு சார்ந்த நிறுவனம் கே நாலேட்ஜ்(K-Economy) எனப்படும் ஆட்களை உலகத்தில் எங்கு இருந்தாலும் அவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு சிங்கப்பூர் ரெசிடன்ட் எனும் அந்தஸ்து, இன்குபேட்டர் எனும் கண்டுபிடிப்புக்கான ஒரு ஆராய்ச்சி கூடம் உள்ள ஒரு அலுவுலகம் சயின்ஸ் பார்க்கில், அந்த புது கண்டுபிடிப்புக்கு தேவையான கேபிடல் (Capital) எனும் முதல், மற்றும் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக சிங்கப்பூர் அரசே பங்கு கொள்ளும், அதை பெற்ற பாக்கியவன் நானும் ஒருவன். இது மட்டுமல்ல அதற்க்கு பிறகு மம்பு (MAMPU)எனப்படும் மலேசிய பிரதமர் அலுவலகத்தில் ஒன்னரை வருடம், மலேசியன் ஸ்பேஸ் ரிசர்ச் (MEASAT)எனப்படும் வின்வெளி ஆராய்ச்சியில் 2006 வரை பணி புரிந்து அதற்க்காக ஒன்பது மாதங்கள் போயிங் (Boeing Aero Space - Los Angeles) மற்றும் பதிமூனு மாதம் (NASA) நாசா வில் ஆராய்ச்சி மேலாளாராக என்னை அனுப்பி வைத்தனர். அப்புறம் தான் இந்த நான்கு வருட சினிமா சகவாசம். நான் இதை பெருமைக்காக பகிரவில்லை நாசா என்று நான்கெழுத்து மேஜிக் உலகில உள்ள அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று, ஆனால் திருநெல்வேலியில் சரியாக ஒரு கார் கூட செல்ல முடியாத ஒரு தெருவில் பிறந்த எனக்கு என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு செயல், அந்த இரண்டு வருட ஆராய்ச்சியில் தான் இந்த அனு உலை மற்றும் அதின் லாப நஷ்டங்களை தெரிந்து கொண்டேன்.

அனு உலை நமக்கு வேனுமானால் இது புது விஷயம் ஆனால் 1942 தான் அனு உலை பிறந்த வருடம். சுமார் 69 வருடத்திற்க்கு பிறகு இதை பற்றி இவ்வளவு அளவுக்கு விவாதிக்கும் சூழ் நிலை அனு உலையின் மீது உள்ள பிரச்சினை அல்ல, இயற்க்கை பேரழிவின் போது அனு உலையின் பாதிப்பிலிருந்து எப்படி மீள்வது என்பது தான் கவலையே...... அனு உலையய் முதன் முதலாக 1942 ஆம் ஆண்டு ரிக்கர்டோ ஹுசாடா என்ற ரஷிய விஞ்சானி தான் முதன் முதலாக கண்டு பிடித்தார், அது மட்டுமில்லாமல் 1954 ஆம் ஆண்டு முதன் அனு உலை கட்டபட்டு மின்சாரம் தயாரித்தார்கள். ஒரு நல்ல விஷயம் எவ்வளவு நாள் ஆனாலும் அது கடைசியில் நம் வாழ்வின் அங்கமாகிவிடும், ஆனால் சில கெட்ட விடயம் எவ்வளவு முயன்றாலும் அது காலத்திர்க்கு நிலைக்காது, அது போல இந்த அனு உலை என்பது உலக அளவில் ஒரு இன்றி அமையாத ஒரு அங்கமாகிவிட்டது. இன்று உலக அளவில் 21% சதவிகித ATOMIC மின்சாரம் உற்பத்தி உள்ளது இதில் 50% சதவிகிதம் அமெரிக்கா, பிரான்ஸ்,ஜப்பான் நாடுகளின் உற்பத்தி ஆகும். மீதமுள்ள 38 நாடுகள் 50% சதவிகிதம் மின்சாரம் தயாரிக்கிறது. உலகம் முழுவதும் மொத்தம் 433 அனு உலைகள் இருபத்தினான்கு நேரமும் கொஞ்சம் கூட மாசு ஏற்ப்படாமல் தன் பனியய் சத்தமில்லாமல் செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் இது வரை ஆறு முறை தான் விபத்து என்று பார்த்தால், அதிலும் நான்கு முறை பூகம்பத்தினால் என்ற உண்மை யாருக்கு தெரியும்.


அனு உலை என்றால் என்ன - உலகில் எல்ல விஷயங்களுக்கும் தேவை சக்தி எனப்படும் ஒரு எனர்ஜி பேக்டர், நம் உடம்புக்கு தேவை சாப்பாடு எனப்படும் சக்தி, அது போல கார்களுக்கு தேவை பெட்ரோல், டீசல் எனப்படும் எரி சக்தி. எரி சக்தி இப்பொழுது எட்டா கனியாகி போய் விட்டது நிறைய நாட்டில், ஏன் இந்தியாவில் கூட அதனால் தான் நாம் நாட்டின் வருமானத்தை எல்லாம் கச்சா இறக்குமதி எனப்படும் அரக்கனுக்காக நாம் லட்சம் கோடியில் வருடா வருடம் போட்டி போட்டு செழவழித்து கொண்டு இருக்கிறோம். மாற்று எரிபொருள் இந்த 200 வருடங்களாகவே அது ஒரு ஆராய்ச்சி பொருளாகவே வலம் வருகின்றன காரணம் உள்ளூர் மற்றும் உலக அளவில் ஆயில் மாபியாக்கள் ஆதிக்கம். இந்த சூழ் நிலையில் சோலார் எனர்ஜி,காற்றாலை எனர்ஜி,ஹயட்ரோ எனர்ஜி,பயோ எனர்ஜி எல்லாமே ஒரு வருடத்தில் 3% தேவையய் தான் நம்க்கு ஈடு கட்டுகிறது. நமக்கு எனர்ஜி என்றால் இப்பொழுது கிடைக்கும் அனல் மின்சாரம் தான் ஆம் கச்சா எண்ணய் மாதிரியே கருப்பு தங்கம் என கூறும் நிலக்கரியின் வழிதாரத்தை கொண்டு நமக்கு மின்சார தேவையை அறை குறையாக நிறைவேற்ற படுகிறது. ஆனால் அந்த கருப்பு தங்கமாகிய நிலக்கரியும் இன்டோனேஷியா மற்றும் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டாலும் அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உப்புமா போன்ற ஒரு ஆபத்பாந்தவன் தான் முழுமையான சொலுயுஷன் இல்லை ஏன் என்றால் கரியை தொட்டாலே கருப்பாகும் நம் கைகள் அதை இருபத்தினான்கு நேரமும் எரித்து அதன் மூலம் கிடைக்கும் எனர்ஜி எவ்வளவு அசுத்தம் என சொல்லி தெரியவேண்டாம். இந்த அனு உலை உன்மையாகவே ஒரு வர பிரசாதம். ஒரு சின்ன உதாரனம் மூனு லட்சம் (3 lakhs Kgs) கிலோ நிலக்கரி செய்யும் ஒரு வேலையை சுமார் அருபத்தி ஐந்து கிராம் (65 gms) செறிவுட்ட பட்ட ஒரு அனு சுமார் இருபது வருடங்கள் பலன் தரும் என்று எவ்வளவு பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது. அதற்க்காக அதன் தாக்கம், அதன் ரிஸ்க் பேக்ட்ரை நான் உங்களுக்கு தெரிவிக்காமல் இருக்க போவதில்லை. சமையல் எரிவாயு சிலின்டரை எவ்வளவு பயமாக் பார்க்கும் நாம் அதை வீட்டின் சமையல் அறையில் வைத்து நாம் பக்குவமாக பயன்படுத்துவதில்லயா, அல்லது நூற்பது அடி மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே கிலி ஏற்ப்படும் நாம் சுமார் 45,000 அடி உயரத்தில் கன்டம் விட்டு கன்டம் பறக்கிறோமே அந்த விமானம் ஏறும் வரை தான் நம் கையில் இறங்கிய பிறகு தான் நிஜம் எனும் மன பக்குவத்திர்க்கு வந்த நாம் ஏன் இன்னும் அனு உலையய் எமனாக பார்ப்பது எந்த விஷயத்தில் சரியானது.....இனிமேல் ஆக்கபூர்வ தகவல்களுடன்...... Nag Ravi - 19th September 2011.

இந்த கட்டுரை இன்னும் மூனு பாகங்களாய் அனைத்து உண்மைகளூடம் படங்கள் மற்றும் ஆதாராத்தோடு எழுதிகிறேன் அதே சமயம் அதன் ஆப்டர் எபக்ட்களை பற்றியும் கண்டிப்பாக கூறுகிறேன். தயவு கொண்டு இதை முடிந்தால் உங்கள் பக்கங்களில் பிரசரியுங்கள் உங்களுடைய கமென்டுக்கள் கண்டிப்பாக எழுதி என்னை ஊக்க படுத்துங்கள், அரசியல் சாயம் பூசாதீர்கள் பீளிஸ்

I can answer to every meaningful question or doubt on this subject........

மேலும் விவரங்களுக்கு....http://tinyurl.com/6h5waj2


No comments:

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்