நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Monday, 26 September 2011

சபாஷ் ......சரியான போட்டி....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இந்த சூழ்நிலை உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டுமில்லாமல்.....சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் ஏற்படவேண்டும்....
ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக களம் இறங்குவதை பார்க்கும் போது உள்ளாட்சிகளில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.... நேரத்திற்கு ஏற்றாற்போல் கூட்டணிகளை மாற்றிக்கொள்கின்ற கட்சிகளுக்கு செம அடி....

திமுகவில் இப்போதே பாட ஆரம்பித்துவிட்டார்கள்.....தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கிறதென்று,....இதுல ஸ்டாலின் வேற...மறுபடியும் சென்னை மேயரா இப்ப இருப்பவரே வருவாருன்னு ஜம்பமா சொல்லுறாரு....எப்படித்தான் உங்களால மட்டும் இப்படியெல்லாம் பேச முடியுதோ....
(தோத்தபிறகு சப்பைக்கட்டு கட்டலாம் அதுக்குத்தான்...)

அதிமுக முழு நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.... ஆனாலும் ஓவர் கான்பிடன்ஸ் ஒடம்புக்கு ஆகுமான்னு தெரியல.... பெரும்பாலான இடங்கள் இவர்களின் வசம்தான் வரும் என்பதில் சந்தேகமில்லை....சுயநலமாக இருந்தாலும், ஒட்டுண்ணி கட்சிகளுக்கும், ஜாதி கட்சிகளுக்கும் ஆப்பு வைத்த அம்மா ராக்ஸ்.....

காங்கிரசில் ஒரே தமாசுதான் போங்க.... பதிமூணு தலைவருங்க சேர்ந்து...!!??? வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க போறாங்களாம்....ரொம்ப கஷ்டம்ன்னு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு பேட்டியில சொல்லிட்டு சிரிக்கிறார்....அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்.....
யாருமே இல்லாத கட்சிக்கு தலைவருங்க மட்டும் பதிமூனுபேரு....

திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி தேமுதிக முழிபிதுங்கி நிக்குது....சட்டமன்ற தேர்தல்ல கப்பல்ல புட்போர்டு அடிச்ச கேப்டன், உள்ளாட்சி தேர்தல்ல தண்ணியில தள்ளிவிடப்பட்டுள்ளார்....கரைசேருவாரா...???கஷ்டம்தான்....."சட்டி சுட்டதடா...புட்டி நிக்குதடான்னு.....ஊறுகாயோட ஒதுங்கிட்டாருன்னு கேள்வி....

காம்ரேட்டுகள்....தோள்ள துண்டு போட்ட தோழர்களெல்லாம்....துண்ட எடுத்து...கைய உள்ள வச்சு மறச்சு பேரம் படியுதான்னு படிப்படியா ஏறி இறங்கினு இருக்காங்க....அருவாள வச்சு எந்த கதிர அறுக்கபோறாங்கன்னு தெரியல.....

இந்தா பாருயா நம்ம ஆளுங்க....பழசாகிப்போன புதிய தமிழகம்....விடுதலையாகிப்போன சிறுத்தைகள்....புரட்சி செய்யாத பாரதம்....எல்லாம் தனித்தனியா.... அடப்பாவமே....என்னய்யா ஆச்சு....எல்லாரும் தலைமேல துண்டு போட்டுக்குனு.... நீங்கெல்லாம் மொதல்ல போய் காக்கா கூட்டத்த பாத்துட்டு வாங்க....காக்கா புடிக்கிறத வுட்டுட்டு ஒத்துமையா இருக்க கத்துக்கோங்க.....

சே....என்ன உலகம்யா இது....ஏதாவது குட்டைய குழப்பி....கலவரம்பன்னி....காடுவெட்டி...ஜெயிக்கலாம்ன்னு பாத்தா....எதுக்குமே வழியில்லையே....பேசாம புள்ளயமட்டும் அமைச்சராக்கிட்டு நாம வீட்டுலேயே இருந்திருக்கலாமோ....தைலம் பூசிக்கிட்டே... தோட்டத்துல யோசிக்கிறாராம்....ஸ்டெத்துக்காரர்....

யாராவது எப்படியாவது போங்க....சட்டமன்றத்துக்கே மட்டம்போட்டுட்டேன்....இதுக்கா வரப்போறேன்....நான் போயி தூக்கு தண்டனைய நிறுத்தனும்....இலங்கை விவகாரத்த பாக்கணும்....உலக லெவெல்ல பிசியா இருக்குற என்னப்போயி....தொந்தரவு செய்றீங்களேன்னு வாய்க்கா வரப்புல நின்னுக்குனு ஒருத்தரு சொல்லுறாரு....

வாங்க வாங்க.... உங்களுக்காகத்தான் காத்துக்குனு இருக்கேன்னு... சும்மா ஹாயா கால்மேல கால் போட்டு உக்காந்துக்குனு இருக்கு தேர்தல் ஆணையம்....

அதுசரி.....உங்களுக்கெல்லாம் என்ன வேணும்????? நீங்கெல்லாம் யாரு....???? இந்த கேள்வியோட....சில இடத்துல ஆரத்தியும், பல இடத்துல செருப்பையும் வச்சிக்கிட்டு வெயிட் பண்றாங்களாம் நம்ம மக்கள்.....பாத்து போங்கப்பா.....

இந்த மொக்கசாமி சொல்லவேண்டியத சொல்லிட்டேன்.....அப்புறம் உங்க இஷ்டம்....

========================================================================


1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்போது தெரியும் எந்தந்த கட்சி எவ்வளவு தகுதி உடையது என்று...

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்