நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Thursday 3 November, 2011

சென்ற பதிவின் தொடர்ச்சி...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சென்ற பதிவின் தொடர்ச்சி...

சென்ற பதிவு http://mokkaiswami.blogspot.com/2011/11/blog-post.html


இவர்தான் அருட்திரு வில்லியம் கௌடி...கிருத்துவ மிஷனரியாக திருவள்ளூர் மற்றும் ஈக்காடு பகுதியில் ஊழியம் செய்து, தன்னுடைய திருப்பணியால் இந்தப்பகுதி வளர்ச்சியடைய செய்தவர்...

இவர் மட்டுமல்ல...இவரைப்போல் எத்தனையோபேர் தமிழகத்தின் பல பகுதிகளில் சமூகத்தால் உதாசீனம் செய்யப்பட்ட மக்களிடம் மனித நேயத்தோடு பழகி, அவர்களுக்கு கல்வி, மருத்துவம், நிலம் மற்றும் தொழில் போன்ற வசதிகளை முன்னின்று செய்து கொடுத்தார்கள்...

கிருத்துவ மிஷனரிகளாக இருந்தாலும்... இவர்கள் வந்த உடனே ஒவ்வொரு ஊரிலும் ஒரு சர்ச் கட்டிவிட்டு நேரடியாக இறை பணியை செய்யவில்லை.....மாறாக இவர்கள் செய்தது....பட்டிக்காட்டானுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவம் மற்றும் கல்வியை அளிக்கும் வழியாக...கல்விச்சாலைகளையும், மருத்துவமனைகளையும் அமைத்தார்கள்...அதன்மூலமாக தங்கள் இறை பணியையும் நிறைவேற்றினார்கள்...

ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது...இன்று வருமானம் ஒன்றே குறிக்கோளாக ஆகிவிட்டது...

கிருத்துவம்...



கல்வி மற்றும் சர்ச்-ஐ பொருத்தவரை சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் மூலதனத்தையோ அல்லது முதலீட்டையோ வைக்கப்போவதில்லை....அதாவது யாருக்கும் சம்பளத்தையோ அல்லது தேவையான பொருட்களையோ மாதாமாதம் வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை...சர்ச் ஐப்பொருத்தவரை, உறுப்பினர்கள் கொடுக்கின்ற சந்தா மற்றும் கடவுளுக்காக படைக்கப்படுகின்ற பணமோ அல்லது பொருட்களோ பேராயத்திற்கு வருமானம் மட்டுமே...செலவு என்று சொல்லப்போனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை...

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு பாடுபடுகிறோம் என்று சொல்பவர்கள்...ஒருநாளாவது ஏழை பாழைகளின் வீட்டிற்கு சென்றிருப்பார்களா??? இவர்களை நேரில் சந்திக்கப்போனாலும் இதே கதிதான்...கோட் போட்டவனும், காரில் வருபவனும்தான் இவர்களை சந்தித்து பேச முடியும்...மற்றவர்களை பேருக்கு சந்தித்தாலும் பேசுவது கடினம்...தீண்டாமையையும் ஒடுக்கப்படுதலையும் பொறுக்க முடியாத மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் அளித்த மதத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டார்கள்...ஆனால் இப்போது அதன் நிலைமை அதைவிட கொடுமை...கிருத்துவ மதத்திற்குள்ளேயே ஜாதி பாகுபாடு தலைவிரித்தாடுகிறது...

எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் இன்னொரு விஷயம் என்னவென்றால், தேவாலயத்தில் நடைபெறும் தேர்தல்...அரசியல்வாதிகள் இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும்...வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய ஆலயத்தில் பல பிரிவுகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவார்கள்... சில இடங்களில் கிருத்துவ மார்கத்திற்கு எதிரான வன்முறை மற்றும் அராஜகத்தை இந்த தேர்தல் நேரங்களில் பார்க்கலாம்...இன்னும் பிஷப் எலக்க்ஷன் வந்தால் அவ்வளவுதான்...ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக்கொள்வார்கள்....ஆன்மீகத்தையும் சாக்கடையாக்கும் நிகழ்ச்சி இந்த தேர்தல் என்றால் மிகையாகாது...

அருட்பணி என்பது எதோ இறைவனைப்பற்றி எடுத்துக்கூறுவது மட்டுமல்ல...சமூகத்தில் நலிந்தவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதே அருட்பணித்தான்....இதைத்தான் இயேசு கிறிஸ்து சொன்னார்...சிறுமைப்பட்டவர்களுக்கு செய்யும் நற்செயல் கடவுளுக்கு செய்வதற்கு சமம்...

இதுபோல் இன்னும் ஆயிரமாயிரம் சர்ச்-களை கட்டினாலும் அதினால் பயன் ஒன்றும் இல்லை...

திருத்துவம்....

சி எஸ் ஐ பொறுத்தவரை...தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை உள்ள அனைத்து பள்ளிகளும் அரசு உதவி பெரும் பள்ளிகளாகவே இருக்கிறது...இலவசக்கல்வி என்று ஆரம்பித்த பள்ளிகளும்கூட இப்போது டொனேஷன், பீஸ் என்று கல்லா கட்டுகின்றன...எங்கள் ஊரில் இருக்கும் கௌடி மேல்நிலைப்பள்ளியில் கூட இதே கதிதான்...வெறும் 7 மாணவர்களை வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இன்று குறைந்தபட்சம் ரூபாய் 10,000  இருந்தால்தான் அட்மிஷனே...ஒரு ஐந்து ஆறு வருடத்திற்கு முன்பு பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வந்த ஒரு மாணவி இதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர ரூபாய் 5000 டொனேஷன் வாங்கிக்கொண்டு சீட் கொடுத்தவர்கள்தான் இந்த நிர்வாகத்தினர்...

இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்க சம்பளம்தான்...வித்தியாசம் ஒன்றும் கிடையாது...அதே விடுமுறைநாட்கள்..அதே வேலை...அதே ஊதியம்...ஆனால் சம்பளம் மட்டும் அரசாங்கத்திலிருந்து....

அரசாங்க உதவிபெறும் பள்ளியாக இருந்துகொண்டு, இவ்வாறு டொனேஷன் வாங்குவதற்கு பதிலாக வெளியில் வந்து தெருத்தெருவாக பிச்சை எடுக்கலாம் நிர்வாகத்தினர்....

இவர்களும் யாருக்கும் சம்பளத்தையோ அல்லது தேவையான பொருட்களையோ மாதாமாதம் வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை...அதனால் வரும் பணம் அத்தனையும் மிச்சம்...கல்வியின் தரம் உயர்ந்ததா என்றால்...நம் முன் ஒரு பெரிய கேள்விக்குறிதான் நிற்கிறது...என்ன ஒன்று...தலைமை ஆசிரியரின் அறை மட்டும் உயர்ந்திருக்கின்றது...ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட ரூமாக...

இன்னும் ஆயிரமாயிரம் பள்ளிகளைக்கட்டுங்கள்... பயன் ஒன்றும் இல்லை...

மருத்துவம்...



எத்தனையோ பேரின் உயிர் காத்து, அநேக குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இந்த மருத்துவத்துறையின் நிலைமைதான் கவலைக்கிடமாக இருக்கிறது...

இலவச மருத்துவ சேவை அல்லது குறைந்த செலவில் மருத்துவ சேவையை அளித்து வந்த மருத்துவமனைகள்...இன்று தங்களுடைய வருமானத்தை வைத்துக்கொண்டு தங்களை பராமரித்துக்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன....இதின் ஊழியர்களுக்கோ அல்லது மருத்துவமனையை சீர்செய்யவோ பேராயத்திலிருந்து எந்த உதவியும் அருளப்படுவதில்லை... இந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள் எடுக்கும் முடிவினைப்போருத்து இதன் நிலைமை நிர்ணயிக்கப்படுகிறது...இதில் வேலை செய்யும் மருத்துவ ஊழியர்களுக்கு கூட சிகிச்சை இலவசம் கிடையாது என்பதுதான் வேதனைக்குரிய உண்மை...இவர்களின் ஊதியமோ மற்ற தனியார் மருத்துவமனைகளை விட மிக மிகக்குறைவுதான்...

ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க முதலீடு அதிகம் வைக்கவேண்டும்...அதின் ஊழியர்களின் சம்பளம்...மருந்து மாத்திரைகள்...தேவையான உபகரணங்கள்....அனைத்தும் தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும்...இந்த சூழ்நிலையில் குறைந்த செலவில் மருத்துவ சேவை என்பதும் படிப்படியாக குறைந்துவருகிறது....எங்கள் பகுதியில் அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த மருத்துவமனைகள்....மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளதற்கு சென்னை பேராயத்தின் கவனக்குறைவே அல்லாமல் வேறில்லை.... பொதுவாக மருத்துவமனைகள் பேராயத்தின் கையில் இருக்கும் வரை கண்டிப்பாக வளராது....

வேலூரில் உள்ள சி எம் சி மருத்துவமனை இன்று வரை பேராயத்தின் கட்டுப்பாட்டில் இல்லை....அதனால் நன்றாக வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் உலகமே வியந்து பாராட்டும் வகையில் இருக்கிறது....சி எம் சி யில் இருந்து படித்துவிட்டோ அல்லது வேலை செய்துவிட்டோ எங்கு சென்றாலும் பெரிய வரவேற்பு இருக்கிறது... 



அதே வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை யில் உள்ள ஸ்கடர் மெமோரியல் ஆஸ்பத்திரியை எடுத்துக்கொண்டால் அதன் வளர்ச்சி என்பது ஒன்றும் இல்லாமல் இருக்கிறது....இந்த மருத்துவமனையும் மிகவும் பழமையான புகழ்பெற்ற ஒன்று...இன்று இந்த மருத்துவமனையும் இந்த நிலைமைக்கு வரக்காரணம்....இது அந்த மாவட்ட பேராயத்தின் கைகளில் இருப்பதால்தான்....

சென்னையில் உள்ள சி எஸ் ஐ கல்யாணி மருத்துவமனையை எடுத்துக்கொண்டால்...அதின் சிற்றாலயத்தையும், உள் நோயாளிகளின் வார்டையும் பார்த்தாலே உண்மை எளிதாக விளங்கிவிடும்....


இவ்வளவையும் வைத்து பார்க்கும்போது ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது...செலவு செய்யாமல் வருமானம் வருகின்ற வழிகளை மட்டும் ஆராய்ந்து அதில் மட்டும் தன்னுடைய நிறைவான பணியினை செய்கிறது இந்த சி எஸ் ஐ ன் பேராயங்கள்....அதிலும் வருகின்ற தலைமை மருத்துவ அதிகாரிகள் நல்ல மனமுடயவர்களாய் இருந்தால் தப்பிப்போம்...அல்லது அவர்கள் தங்களின் முன்னேற்றத்தை மட்டும் பார்த்துக்கொண்டு...கிடைத்தவரை லாபம் என்று சுருட்டிக்கொண்டு போய்விடுவார்கள்...

இன்றும் இந்த ஈக்காடு மருத்துவ மனையில் ஒரு நல்ல ஈ சி ஜி மெஷின் வாங்க எத்தனை பாடுபடுகிறார்கள் என்று இங்கு இருப்பவர்களுக்குத்தான் தெரியும்...


இதுபோன்ற ஆலயத்தைக்கட்ட பல லட்சம் செலவு செய்யும் பெரிய நகரத்து சர்ச்ல் உள்ளவர்கள் மனது வைத்தால்....ஒரு ஈ சி ஜி மெஷின் என்பது பெரிய விஷயமல்ல.....

உயிர் காத்த மருத்துவமனைகளின் உயிரை காப்பார்களா?????? பேராயம்தான் பதில் சொல்லவேண்டும்......ஏனென்றால் இன்றைய நிலைமையில் இயேசு கிறிஸ்து கிருத்துவர்களாலேயே சிலுவையில் அறையப்படுகிறார்...


உயிர்த்தெழுமா??? நீதியும் நியாயமும்....


9 comments:

MANO நாஞ்சில் மனோ said...

இதுபோன்ற ஆலயத்தைக்கட்ட பல லட்சம் செலவு செய்யும் பெரிய நகரத்து சர்ச்ல் உள்ளவர்கள் மனது வைத்தால்....ஒரு ஈ சி ஜி மெஷின் என்பது பெரிய விஷயமல்ல.....//

மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே...!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உயர்ந்தவர்களின் இதுபோன்ற அக்கரையற்ற செயல் உண்மையில் வேதனைதான்..

சக்தி கல்வி மையம் said...

உயிர்த்தெழுமா??? நீதியும் நியாயமும்...

சந்திரானந்தா சுவாமிகள் said...

இவ்வளவையும் வைத்து பார்க்கும்போது ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது...செலவு செய்யாமல் வருமானம் வருகின்ற வழிகளை மட்டும் ஆராய்ந்து அதில் மட்டும் தன்னுடைய நிறைவான பணியினை செய்கிறது இந்த சி எஸ் ஐ ன் பேராயங்கள்#
THEY KNOW TO SURVIVE THEMSELVES...

SURYAJEEVA said...

இன்னுமா இந்த உலகம் கடவுளை நம்புது?

Unknown said...

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை புரிந்து எப்போது சுய நலமில்லாமல் பொதுநல நோக்குடன் உரியவர்கள் செயல் படுகிறார்களோ
அப்போதுதான் இதற்கு நல்ல தீர்வு கிட்டும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

Unknown said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி

செவிலியன் said...

இதெற்கெல்லாம் என்றுதான் விடிவுகாலம் பிறக்குமோ....??????????????

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்