நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Saturday, 27 August 2011

பார்வையின் மத்தியில் ஓர் பயணம்....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
                                              படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
என்னுடைய சொந்த ஊரான திருவள்ளூரிலேயே, ஒரு பிரபல தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு என் தந்தையை செக்கப்புக்கு கூட்டிட்டு போனேன்... ஒரு சில டெஸ்ட் எடுக்க அங்கிருந்து அவங்களோட சென்னை மருத்துவமனைக்கு போகணும்ன்னு சொன்னாங்க..... அவங்களே அதற்கான போக்குவரத்தையும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க... காலை எழேகாலுக்கு வரச்சொன்னார்கள். நாங்களும் அதுக்கு ஐந்து நிமிஷம் முன்னாலேயே  போய்விட்டோம்...
அங்கு அவங்க அட்டன்டன்ஸ் எடுத்துட்டு எட்டேகால் வரைக்கும் வெயிட் பண்ண வச்சாங்க....பாவம் வந்தவங்கள்ள பாதிக்கு மேல சுகர் பேஷண்டுங்க(எங்கப்பாவையும் சேத்து)... எல்லாரும் அங்க இங்கன்னு போயி டிபன் வாங்கினுவந்து சாப்பிட குடுத்தோம்...
ஒரு ஆறு ஜோடி வயசானவங்க... ஜோடியில ஒருத்தர் கண்ணுல பிராப்ளம்...அவங்கவங்க ஜோடிய கையபுடிச்சி கூட்டுன்னு வந்த அழகு இருக்கே...இதெல்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டங்க....
ஒருவழியா வண்டியில ஏறி 8.20 க்கு கெளம்பி 10.30 க்கு பொய் சேர்ந்தோம்...

எத்தனையோ முறை அந்த வழியில போயிருந்தாலும் இதுதான் அந்த ஆஸ்பத்திரிக்குள்ள மொதல் முறையா போனது... வித்தியாசமான மனுஷங்க...
                                              

எங்க பக்கத்துல ஒரு மாமி தன்னோட பையனுக்கு கண்ணு சரியா தெரியலன்னு வந்தாங்க போல இருக்கு, பையனுக்கு வயசு ஒரு 38 க்குள்ள இருக்கும். கொஞ்சம் மனவளர்ச்சி இல்லாம இருந்தான்....பெரிய சோடா புட்டி கண்ணாடி போட்டுனு இருந்தான்....அவனுக்கு கண்ணுல பார்வை வரணும்னா 80000 ரூபாய்க்கு ஏதோ ஒரு இன்ஜெக்சன் போடணும்னு சொல்லிட்டு, 20 % தான் பார்வை வரும்...ஆனாலும் கியாரண்டி இல்லேன்னு சொல்லிட்டாங்கபோல....பாத்தா பணக்காரங்களாத்தான் தெரிஞ்சாங்க...உடனே பணத்துக்கு ரெடிபண்ணிட்டு இருந்தாங்க....அந்த மாமி சவுண்டா போன்ல பேசுனதுல இருந்து இதெல்லாம் தெரிஞ்சிச்சி...
இன்னொரு பக்கம்...வயசான அம்மாவும் அவங்களோட வயசான பொண்ணும்.....காசுக்கு எங்கம்மா போறது.....கண்ணுல புரை இருக்கு ஆபரேஷன்  பண்ண 25000 ரூபாய் செலவாகும்ன்னு சொல்றாங்களேன்னு...புலம்பிக்கிட்டு இருந்தாங்க...நாங்க நடுவுல ஒக்காந்துனு இருந்தோம்....அப்பத்தான் புரிஞ்சது....மிடில் கிலாசுன்னா என்னான்னு...
 சும்மா ஆஸ்பத்திரிய ஒரு ரவுண்டு வந்தேன்... அங்கு வேலை செய்றவங்கள்ள 90 % பெண்கள் மூக்குத்தி போட்டுனு இருக்காங்க...அது ஒரு குவாலிபிகேஷன் போலிருக்கு....

                                                    படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
கண்ணு, கம்ப்யூட்டர், கண்ணாடி....இதைத்தவிர வேற ஒண்ணுமே கண்ணுக்கு படல....

மதியம் சாப்பிட ஒரு கேண்டீன் இருக்கு....அங்க போய் என்னமோ சாப்டுட்டு சும்மா மொட்ட மாடியில போய் நின்னு சென்னை எப்படி இருக்குன்னு பாத்தேன்...
                                              படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
அட!  நம்ம சென்னையா இதுன்னு விவேக்குக்கு வர்றாமாதிரி மைல்டா ஒரு டவுட்டு எனக்கும் வந்தது....
                                             படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
இன்னும் நிறையா மரம் இருந்தா நல்லாத்தான் இருக்கும்.....
பரவாயில்லன்னு சந்தோசப்பட்டுக்கிட்டே கீழ வந்தா....
                                                                    படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
ஏய்...இன்னா மாமே....நம்ம மெட்ராசு மேலியே டவுட்டு வச்சிக்கிரியான்னு....கேக்குறாமாதிரி இருந்திச்சி அங்க பாத்த காட்சி....
        படங்களை சுட்டினால் பெரிதாக பார்க்கலாம்...
 
தமிழ் நாட்டோட முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வருங்க....இந்த ஏரியாவுலதான் இருக்காங்க...நாத்தம் தாங்க முடியலடா சாமி.....
கண் ஆஸ்பத்திரிக்கு வந்தவங்க.... கண்ண மூடிக்கினு போனாங்களோ இல்லையோ.....நல்லா மூக்க மூடிக்கினு போனாங்க....
 

No comments:

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்